Pages

திங்கள், செப்டம்பர் 21, 2015

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்


  • மாற்ற முடியாததிருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்படுவதுதனது நம்பிக்கைகொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்தி சுமத்துவதுஅற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பதுமனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள்.
  • மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
  • பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
  •  பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும். வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும் தன் உடலில் யாருக்குத்தான் விருப்பமில்லை.
  • மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும்வரை கோபம்தான் நிறைந்திருக்கும்.
  • துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்துவிடும்.இன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.
  • நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம்.அதனால் நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.
  • புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது.மனிதர்களைப் படித்து அறிந்துகொள்ளும் ஞானம்தான் இந்தக்காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி.ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத்தான் இருக்கிறான்.அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.
  • சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறிவிடுகின்றன.
  • நல்லவரைப் பார்க்கும்போது பின்பற்ற நினையுங்கள்.தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
  • மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையான காரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால் தான். அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம்தான்.
  • வெற்றி ஒரு வானவில்.எட்டத்தில் இருப்பதால் தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.

கருத்துகள் இல்லை: