Pages

புதன், அக்டோபர் 03, 2012

பறக்கும் தட்டுக்களின் சுவடுகள்



(1) முதலாவது படத்தில்... வானில், இரண்டு பறக்கும் தட்டுக்களை ஒத்த தெளிவான ஓவியங்கள் குகைச்சுவர்களில் வரையப்பட்டுள்ளது.





(2) இரண்டாவது படத்தில்... ஒரு பெண்ணை வேற்றுவாசிகள் (?) சூழ்ந்துகொள்வதுபோல் வரையப்பட்டுள்ளது.







-------------------------------------------------------------------------------------------


(3) இந்த படங்கள் ஃப்ரான்ஸின்... "Pech Merle "  எனும் குகையின் சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். கிறிஸ்துவுக்கு முன்.. 17 000 தொடக்கம் 15 000 ஆண்டுகளுக்குட்பட்டது. இதில், பல பறக்கும் தட்டுக்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் உள்ள மனித உருவம் ஏலியன்ஸாக அல்லது... ஏலியன்ஸ் மனிதனுடன் தொடர்புகொள்வதைக்காட்ட வரையப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------
(4) இந்தப்படங்கள்... தஷிலி (
, கிறிஸ்துவுக்கு முன் 6 000 ஆண்டை சேந்தது. இதிலும் பறக்கும் தட்டுக்களின் அடையாளங்கள் இருக்கின்றன. வரையப்பட்ட உருவமும் வித்தியாசமானது.

-------------------------------------------------------------------------------------------
(5) இது மெக்ஷிகோ (
Querato, Mexico)
 குகை ஓவியங்கள். 7 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 
இதில் 4 மனித உருவங்களும்... அதற்கு மேலாக, ஒரு பெரிய பறக்கும்தட்டை ஒத்த வடிவமும் வரையப்பட்டுள்ளது. மனிதன் அவர்களுடன் தொடர்புகொண்டான் அல்லது கண்டு வியந்தான் என்று வேறு வேறு தகவல்களை தருகிறது இந்த ஓவியங்கள்.
-------------------------------------------------------------------------------------------
(6) இது அவுஸ்ரேலியாவில் 5000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.
நடுவில் ஆண்,பெண் மனித உருவங்களும்... அவர்களைச்சூழ ஏலியன்ஸின் முகங்களும் வரையப்பட்டுள்ளது.
ஏலியன்ஸிடன் உதவி பெற்றதைக்குறிக்கலாம் எனக்கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
(7) இந்த குகை ஓவியங்கள் Sego Canyon , Utah. வை சேந்தது.... இங்குள்ள பல ஓவியங்களின் உருவங்கள் மனிதனுக்கும் முரணானதாகவும்... ஏலியன்ஸிக்கு ஒத்ததாகவும் உள்ளதாம்.
-------------------------------------------------------------------------------------------

(8) இந்த பதிப்போவியங்கள்... 10 ம் நூற்றாண்டை சார்ந்தவை, ஜப்பானிய மியூஸியத்தில் அறியப்பட்டது.  "பிராஜ்ஜபரமித்த சூட்ரா (Prajnaparamita Sutra) " என அறியப்பட்ட இந்த ஓவியத்தில்... இந்திய பிராக்மி எழுத்துக்களாள் எழுதப்பட்டுள்ளது. இவை, இராமயாணத்தை பற்றி கூறுகிறதாம்... அதுவும் இந்த பக்கத்தில், இராவணனின் புஷ்பக விமானம் பற்றி கூறப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை பெரிப்பித்து பார்க்கையில், இரண்டு பறக்கும்தட்டுக்களின் உருவங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை: