Pages

சனி, செப்டம்பர் 14, 2013

இப்படியும் ஒரு ம ாணவர்!!



சென்னை பல்கலைக்கழகத்திற்கு பழைய மாணவர் ரூ.18 கோடி நன்கொடை

இறந்த பிறகு தனது சொத்தில் பாதித்தொகையை தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருந்த அமெரிக்க டாக்டரின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

அவர் விரும்பியவாறே சொத்தில் பாதித்தொகை ரூ.18 கோடி சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. ரேடியாலஜி படித்த தமிழக மாணவர் ராஜசேகர் ஷாம். படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் கதிர்வீச்சு பிரிவு டாக்டராக பணியாற்றி வந்தார். தனது மனைவி லூசில்லாவுடன் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். இவரது மனைவி புற்றுநோயால் இறந்து போனார்.

கடந்த 2008-ம் ஆண்டு ராஜசேகர் ஷாம் (வயது 68) மரணம் அடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது ஓர் உயில் எழுதி வைத்திருந்தார். அதில், தான் இறந்தபிறகு தனது சொத்தில் பாதியை தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்திற்கும் எஞ்சிய பாதியை அமெரிக்காவில் உள்ள 'நேச்சர் கன்செர்விங் சவுத் போல்க்' என்ற தொண்டு நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த உயிலை நிறைவேற்றுவதற்காக தாமஸ் ஆஸ்போன் என்பவர் நியமிக்கப்பட்டு ஷாமின் சொத்தை விற்று மொத்தம் ரூ.36 கோடி திரட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: