Pages

சனி, மார்ச் 09, 2013

தஞ்சைப் பெருங்கோவில்: தமிழர்களின் சாதனை..!


தஞ்சைப் பெருங்கோவில்: தமிழர்களின் சாதனை..!

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு சோழப்பேரரசால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோவில். 

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள "பீசா கோபுரம்"(pisa tower) மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் (soil test) ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களைக் கூட கடைப்ப
ிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை காத்திரமில்லாமல் கட்டினர். இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது... இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு காத்திரமில்லாத கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்பட்டியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216 அடி உயரமான உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாக வைத்துள்ளது. இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறாதது வருத்தத்திற்குரியது.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301

If you don't have the access 4 google video, try the following youTube links.

1.http://youtu.be/SnANjdReAlY

2.http://youtu.be/yJomuGsi2fU

3.http://youtu.be/za6nYK4L9ns

4.http://youtu.be/c2a0GcoJAjw

5.http://youtu.be/hkCjoSJpkJ8

watch the full video.

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது

நவீன கட்டிட நிர்மானத் தொழில்நுட்பங்களால் கூட தஞ்சைப் பெரிய கோவிலின் மகிமையை இன்றுவரை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது.

சில நேரங்களில் வெளியில் உள்ளதைப் பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளவற்றைப் பற்றி மறந்து விடுகின்றோம் !

இந்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொளுங்கள்!

வாழ்க தமிழ்!

கருத்துகள் இல்லை: