Pages

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சல்

பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறேநெஞ்செரிச்சலாக
வெளிப்படுவதால் இந்த கோளாறை "நெஞ்சுஎரிச்சல் 'நோய்' (Gastro Oesophagal
Syndrome) என குறிப்பிடுகிறோம்.
இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக்குழாயையும்
குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய்,தொண்டையிலிருந்து தொடங்கும்
அமைப்பு வயிற்றில் உருவாகும்அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை
வரை பரவும்நிலை உள்ளதால் இந்நோய்க்கு 'நெஞ்சு எரிச்சல் நோய்'
என்றுபெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம்.
நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ளசத்துப்
பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும்அடிப்படை
தேவையான பொருள்கள். உணவு செரிமானம்வாயிலிருந்தே துவங்கி விடும்.
வாயில் உள்ள உமிழ் நீர் மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும்.அதேபோல்
வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து,புரதச்
சத்து ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில்,ஹைட்ரோ குளோரிக்
அமிலம், பெப்சின், இன்ட்ரின்சிக் ஃபேக்டர்,மியூகஸ் ஆகியவை உள்ளன.
இதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்புதூண்டுதலால் சுரப்பவை.
நம் உடலில் மாவுச் சத்து குறையும்பொழுது, சர்க்கரையின் அளவு குறையும்.
இதை 'ஹைப்போகிளைசிமியா என்று சொல்லுவோம்.
இந்த நிலை ஏற்பட்டால் 'வேகஸ்' என்ற நரம்பு தூண்டப்படும். இந்தநரம்புதான்
வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை,உணவைப் பார்த்தல் ஆகிய
செயல்பாடுகளும் இந்த நரம்பைதூண்டிவிடும். இதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம்
சுரப்புஉண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.
சாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையைஉண்டாக்கினாலும்,
உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சுஎரிச்சல் நோய் உள்ளவர்களுக்கு
இந்த அமிலச் சுரப்பு அடிக்கடிஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி
விடும் நிலைகூடஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய
எரிச்சல்என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி சுருக்கம் சில
நேரங்களில்இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மாரடைப்பு
எனநினைத்து சிலர் அதற்கு மருத்துவம் செய்யும் நிலை ஏற்படும்.
'ஆஸ்பிரின்' மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும். ஆனால்இதே
மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சுஎரிச்சல் நோய்
மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை,நெஞ்சு எரிச்சல்தான் என்று
அசட்டையாக நினைத்து சரியானமருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால்
உயிருக்கே ஆபத்துஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா
அல்லதுநெஞ்சு எரிச்சல்
நோயா எனக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தல்அவசியம்.
நோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடிவாந்தி எடுக்கும்
சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும்.வயிய்றழற்சி போன்ற
நோயுள்ளவர்களுக்கு இந்நோய் அடிக்கடிஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின்
உணவுக் குழயில் உள்ளசுருக்குத் தசைகள் சரியாக வேலை செய்யாததால் அமிலச்
சுரப்புமேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில்
ஒருவழிப்பாதையான
உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும்கீழ்நோக்கியே செல்லும். ஆனால்
நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத்தசை செயல்பாடு குறைப்பாட்டால் அமிலச்
சுரப்பு மேல் நோக்கிச்சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.
நோயின் அறிகுறிகள்: நெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படைஅறிகுறியே நெஞ்சில்
எரிச்சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்குபின்புறம் நெஞ்சு கரிப்பாகத்
தோன்றும் இந்நோய் நாளடைவில்எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின்
அதிகளவில் எரிச்சல்ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு
உண்டாகும்.வயிறு முட்ட உணவு உண்டுவிட்டு, உடனே படுக்கைக்குச்
சென்றால்எரிச்சல்
நெஞ்சுப் பகுதியில் ஏற்படும். மசாலா கலந்த மாமிச உணவு,மது, பீடி,
சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும்.படுத்திருக்கும் நிலை,
வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலைசெய்வர்களுக்கு அதிக அளவு
ஏற்படும் வாய்ப்பு உண்டு.
உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம்உண்டாகும்.
அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சிலசமயங்களில் தூங்கும்
பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல்ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு
எரிச்சலும் ஏற்படும்.
இந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால்வைத்திருந்து, அதை
குடித்தால், எரிச்சல் குறையும். முறையானமருத்துவம் செய்து கொள்ளாமல்
விட்டால், நாளடைவில் உணவுநெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும்.
தொண்டைஅடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப்
பகுதியில்ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால்
கழுத்துப்பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு
தோன்றும். உணவுக் குழலின்பகுதிகளில் புண்ணாகி சுழற்சி ஏற்படும். சில
நேரங்களில் இரத்தக்கசிவும் ஏற்படும்.
நோயறிதல்: நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில்கண்டு பிடிக்கலாம்.
இதய நோயா இல்லையா என்பதை இதய மின்பதிவில் கண்டு பிடிக்கலாம். 'உள்நோக்கி'
முறையில் எளிதாகஅறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி
வழியாகப்பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு
எரிச்சல்நோயுள்ளவர்களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும்நெஞ்சு
சதைப் பகுதி
அழுத்தப்படுவதால்) வயிற்றில் உள்ளபொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம்
இருக்கும். சிலருக்குஉணவுக் குழாயில் உள்ள புண்களையும் உள்நோக்கி
வழியே,தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம்,
அழற்சிஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.
உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.இந்நோயை
கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவுவயிறு முட்ட உண்ணாமல்
அளவோடு உண்ண வேண்டும். மசாலா,எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள்
போன்றவற்றைத்தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்களுக்கும்
இந்நோய்ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம். பீடி, சிகரெட்,
மதுபோன்றவை
இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடுநிறுத்துவது நலம் பயக்கும்.
உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் கொஞ்ச நேரம்நடத்தல் அல்லது
அமர்ந்திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.அமில அதிர்ப்பான்காள
'டைஜின்' 'ஜெலுசில்' போன்ற மருந்துகள்நல்ல பலனைத் தரும். நரம்புத்
தூண்டுதலை குறைகின்றதன் மூலம்அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும்
மருந்துகள் தற்போது அதிகளவில்பயன்பாட்டில் உள்ளன.
நேரத்திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப்பழக்கங்கள்
உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனேஉறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை
இந்நோயிலிருந்து காக்கஉதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம்
செய்துகொள்ளாதநோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும். அவர்களுக்குக்
கூடஉள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில்உள்நோக்கி வழியாகக்
செய்யும்
இம்மருத்துவம் மிகவும்எளிமையானதாகும்.









கருத்துகள் இல்லை: