Pages

வியாழன், நவம்பர் 27, 2014

ஆண் வைத்தியர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் கவனத்திற்கு! ! ! !


பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் வைத்தியர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன.

தனியார் மருத்துவமனை, அரசாங்க மருத்துவமனை, தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் வைத்தியர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் தாதி அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல் ) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிட ம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய்ய வேண்டும்.

வயிறுவலி, கல்லீரல், சிறுநீரகம்போன்ற பிரச்சினைகளுடன் பெண்கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்.

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் வைத்தியர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால் பெண்கள் அதனை சம்பந்தப்பட்ட இடங்களில் முறையிட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

இதனை கண்டிப்பாக எல்லோருக்கும் பகிர்ந்து விளிப்புணர்வை ஏற்படுத்துங்கள் நண்பர்களே.

கருத்துகள் இல்லை: