Pages

திங்கள், செப்டம்பர் 30, 2013

ஃபேஸ்புக்கில் Rs 8,50,000 பரிசு பெற்ற தமிழர் அருள்


ஃபேஸ்புக்கில் Rs 8,50,000 பரிசு பெற்ற தமிழர் அருள்


மிழகத்தை சேர்ந்த "அருள் குமார்" என்பவர் ஃபேஸ்புக்கில் உள்ள தொழில்நுட்ப குறைபாடை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க டாலர் 12,500 பரிசு பெற்று இருக்கிறார். நமது ஊர் பணத்தில் Rs 8,50,000 [ 12500 x 68] வருகிறது, இவர் வாங்கிய தேதிக்கு. எலக்ட்ரானிக்ஸ் & கம்யுனிகேசன் ல் உள்ள இவருக்கு [Ethical] ஹேக்கிங்கில் அதிகம் நாட்டம் உண்டு. இவருக்கு வயது 21.
கூகுள் போலவே ஃபேஸ்புக்கும் தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டு கூறினால், அதற்கு வெகுமதி அளிக்கிறது. கூகுள் அவ்வப்போது இதற்காகவே போட்டி நடத்தும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு இது போல வெகுமதிகள் வழங்கப்படும். ஃபேஸ்புக்கில் Whitehat என்ற இடத்தில் உங்கள் [Bug] கண்டுபிடிப்புகளைக் கூறலாம். நமக்கு குறைந்த பட்சம் $500 கொடுப்பார்கள், அதிகபட்சம் நிர்ணயிக்கவில்லை.
ஹேக்கிங் என்பது இரண்டு வகையாக உண்டு. ஒன்று மற்றவர்களை சிரமப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது கணக்கை ஆட்டையை போட்டு அவர்களுக்கு வேட்டு வைப்பது, மிரட்டி பணம் கேட்பது, ரகசிய தகவல்களை எடுத்து மிரட்டுவது அல்லது அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து ரசிப்பது.
இரண்டாவது, இதையே அதிகாரப்பூர்வ வேலையாக செய்வார்கள் அதாவது ஒரு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்பதை கண்டறிவதற்காகவே ஹேக்கிங்கில் திறமையாக உள்ள நபர்களை அமர்த்துவார்கள். இவர்களது வேலை பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பது தான். இதற்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. எனவே இது குறித்து ஆர்வமாக படிப்பவர்கள் தற்போது அதிகமாகி வருகிறார்கள். ஃபேஸ்புக் & கூகுள் போன்ற நிறுவனங்களில் இது போல கண்டுபிடிக்க செயல்படுபவர்கள் Freelancer என்று அழைக்கப்படும், செய்த வேலைக்கு மட்டும் பணம் பெறுபவர்கள். இவர்களுக்கு மாத சம்பளம் கிடையாது. நாகேஷ் அவர்கள் சொல்வது போல பிழைக்கு ஏற்ற பரிசு வாங்கலாம் .
ஒரு சில நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கே இது போல நபர்களை வேலைக்கு வைத்து இருப்பார்கள். அவர்கள் வேலையே இதை நோண்டிட்டு இருப்பது தான். புரியும்படி சொல்வது என்றால், "அயன்" படத்தில் சூர்யா அவரது மூளையை பயன்படுத்தி பல திருட்டு வேலை செய்வார்.. அதை அதிகாரி பொன் வண்ணன் நல்ல விசயத்திற்கு பயன்படுத்த அவரை பணிக்கு அமர்த்தி, இவரை வைத்து எங்கெங்க தவறு நடக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள பயன்படுத்துவார். இதே தான் அதுவும்.
கொஞ்ச நாள் முன்பு பாலஸ்தீனத்தை சார்ந்த Khalil Shreateh என்பவர் தான் கண்டு பிடித்த ஒரு குறைபாடை ஃபேஸ்புக் உரிமையாளர் "ப்ரதர்" மார்க் கணக்கிலேயே Timeline ல் போட்டுக் காட்ட, செம சிக்கலாகி விட்டது. இதனால் காண்டான ஃபேஸ்புக் இவரது கணக்கை முடக்கி பின் திரும்ப கொடுத்து அதோடு கடைசியாக வெகுமதியையும் கொடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
Whitehat ல் இவர் Bug கூறிய போது இது Bug இல்லை என்று கூறியதால், கடுப்பாகி Mark கணக்கிலேயே [Time line] போட்டு விட்டார் .
இது போல செய்யாமல், அருள் தான் கண்டுபிடித்ததை முறையாக தெரிவித்ததால் பாராட்டுடன் வெகுமதியையும் பெற்று விட்டார். இவர் கூறிய பிரச்சனை அவர்களுக்கு சரியாக புரியாததால் பின் காணொளி மூலம் விளக்கி அனுப்பி இருக்கிறார். இதன் பிறகு உடனடியாக இந்த குறைபாட்டை சரி செய்து இருக்கிறார்கள். அதோட இது மாதிரி இனி வருபவர்கள் காணொளி மூலம் விளக்கினால் மிக எளிதாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்கள்.
அருள் பின் வரும் குறைபாட்டை கண்டு பிடித்ததாகக் கூறி இருக்கிறார்.
1) We can remove any photo from verified real users & Pages such as Mark Zuckerberg, Eminem, Rihanna and so on.
2) We can remove any Shared & Tagged photos.
3) We can remove any User's photo from his Status & Photo album.
4) We can remove any photo from a Page, Group and so on.
5) We can remove Photo from Suggested Post & also from Comments.
Delete any Photo from Facebook by Exploiting Support Dashboard from Arul Kumar.V on Vimeo.
அருள் குமாருக்கு பாராட்டுகள் .
அருள் குமாரின் தள முகவரி - http://arulxtronix.blogspot.in
கொசுறு 1
1. தடுமாறிக் கொண்டு இருந்த நோக்கியாவை மைக்ரோசாப்ட் $7.2 பில்லியனுக்கு வாங்கப்போகிறது.
2. கூகுள் தனது அடுத்த ஆண்ட்ராயிடு இயங்கு தள புதிய பதிப்பிற்கு "Kit Kat" என்று பெயர் வைத்துள்ளது.
3. கூகுள் க்ரோம் உலவிக்கு [Browser] ஐந்து வயதாகிறது.
4. ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10 தனது அடுத்த மொபைல் மாடலான 5S ஐ வெளியிடுகிறது. இதன் உடன் 5C என்ற பட்ஜெட் மொபைலும் வெளியிடப்போவதாக வதந்தி உலவுகிறது. இது உண்மை என்றால் இந்தியாவில் ஆப்பிள் மிகப்பெரிய சந்தையைப் பிடிக்கும்.
5. கூகுள்+ தனது Hangout Chat [Video Chat] வசதியை HD தரத்தில் கொண்டு வரப்போகிறது.
6. Skype க்கு வயது 10 ஆகிறது. இதை மைக்ரோசாப்ட் கொஞ்ச மாதங்கள் முன்பு வாங்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
7. Yahoo! தனது லோகோவை மாற்றி இருக்கிறது.
8. சாம்சங், குழந்தைகளுக்கான Galaxy Tab அறிமுகப்படுத்தப் போகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் கட்டுப்பாடுகளை செய்யலாம்.
கொசுறு 2
இதுவும் ஒரு ஹேக்கிங் செய்தி தான் ஆனால், இது Physical ஹேக்கிங் ஹி ஹி . ஒருவன் எர்ணாகுளத்தில் ஒரு வீட்டில் திருடிவிட்டு, திருடிய வீட்டிலேயே திண்ணையில் படுத்து தூங்கி விட்டானாம். திருடப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்று இருந்தார்கள்.
காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள், யார்ரா இது! வீட்டுல தூங்கிட்டு இருக்கிறது என்று தட்டி எழுப்பி கேட்டு இருக்கிறார்கள். நம்மாளுக்கு அப்பத்தான் "ரொம்ப" தூங்கி விட்டோம் என்று புரிந்து எஸ்கேப் ஆகப் பார்க்க, துரத்திப் பிடித்து செம மாத்து மாத்தி கேட்ட போது "நிறைய வீட்டில் திருடி டயர்ட் ஆகி விட்டது அதனால், கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்" என்று கூறி பேதி கிளப்பினானாம் .
பக்கத்து வீட்டுக்காரங்க செம்ம காண்டாகி, கழுத்து மேலே இரண்டு போடு போட்டு கொண்டு போய் காவல்துறை வசம் ஒப்படைத்து விட்டார்களாம். இனி காவல்துறை இருக்கிற அனைத்து வழக்கையும் இவன் மீதே போட்டு சிக்குனாண்டா ஒரு அடிமை என்று கடமையை ஆற்றி விடுவார்கள் .

கருத்துகள் இல்லை: