Pages

வியாழன், ஜூலை 25, 2013

நிலவை பற்றிய சில சேதிகள்


நிலவை பற்றிய சில சேதிகள்:
1. நமக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறினால் கொடு என்றால் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் என்று தப்பிப்பார்கள், ஆனால் பூமிக்காக உயிர்விட்டது நிலவு என்றால் நம்ப முடிகிறதா?
2. நாம் தரையில் நின்று பார்ப்பது போல் அங்கு நின்று பார்த்தால் நமக்கு என்கும் இருட்டும் அந்த இருட்டின் ஊடாக ஒரு ஒரு மஞ்சள் பந்து தெரியும் அந்த மஞ்சள் பந்து தான் சூரியன்.
3. உயிரினம் நீரில் இருந்து தரையில் வருவதற்கு காரணம் இந்த நிலவு தான், நிலவின் ஈர்ப்பு விசையின் காரணமாக கடல் நீர் உயரும் போது அந்த பகுதிக்கு வரும் உயிரினங்கள் வற்றும் பொது கடலில் மீண்டும் போக பிடிக்காமல் தரையில் இருந்து விட்டது பிறகு தரையில் வாழ்வதற்கு ஏற்ப அதன் உடல் தகவமைப்பு பெற்று வாழ ஆரம்பிக்க இன்று நாம் வரை ஒரு நீண்ட பயணம் நிலவு இல்லை என்றால் தரையில் உயிரினம் இல்லை.
4. அம்மாவாசை, பௌர்ணமி அன்று சில உடலியல் மாற்றம் ஏற்படுவது பற்றி இதுவரை விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை,
5. தவளை இனத்தில் எருமை தவளை எனப்படும் புல்ப்ரக் சரியாக அம்மாவசை அன்று முட்டையிட்டு பௌர்ணமி அன்று குஞ்சு பொறித்து விடும்,

6. நிலவு இல்லை என்றால் பூமி இல்லை, ஆனால் பூமி இல்லை என்றால் நிலவுக்கு கவலை இல்லை, அது அருகில் உள்ள செவ்வாயின் சுற்று வட்டப்பதைக்கு சென்று சுற்றிக்கொண்டு இருக்கும்,
7. அம்மாவாசை அன்று விரதம் இருப்பது அன்றைய சாப்பாட்டை வேண்டுமானால் மிச்சம் பிடிக்க முடியும் மற்றபடி ஒன்றும் ஏற்படாது,
8. மது அருந்திவிட்டு தெளிவான வட்ட நிலவை பார்க்க முடியாது,
9. எகிப்தியர்கள் நிலவை பார்த்து தான் வட்ட சக்கரங்களை கண்டு பிடித்தார்கள்,
10. முன்பு சீனர்கள் முழுநிலவு நாளில் மட்டும் திருமணம் செய்தார்கள். அவர்கள் வண்ண வண்ண ஒளி எதிரொலிக்கும் பீங்கான்களை தோரணமாக தொங்கவிட்டு அதில் நிலவு ஒளி பிரதிபலிக்க திருமண விழாவை கொண்டாடினார்கள், நிலவின் ஒளியில் முதல் இரவை கொண்டாடினார்கள், அங்கிருந்து புறப்பட்டது தான் உலகம் முழுவதும் உள்ள தேனிலவு பயணம் ஹனிமூன் ஸ்வஹராத்
11. சூரியனை ஆணாகவும் சந்திரனை பெண்ணாகவும் இன்று வரை நினைப்பவர்களுக்கு ஓர் உண்மை நமது சூரிய குடும்பம் அனைத்துமே பெண் தன்மை கொண்டது தான்,
12. வாழ்க என்று ஒருவர் வாழ்த்துவதால் ஒருவர் நன்றாக வாழ்ந்து விட மாட்டார்கள், அதே நேரத்தில் வாய்க்கு வந்த படி சாபமிடுவதால் ஒருவர் பாதித்து விடமாட்டார், அது உங்கள் உள்ளங்களை பொறுத்தது, நிலவு நமக்கு சொல்லும் பாடம் இது தான்,
13. குழந்தைகள் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் மிக்கி மவுஸ் உருவானதும் பவுர்ணமி அன்று தான்
14. நிலவிற்கு சோதிடத்திற்கும் தொடர்பு இல்லை,
15. நிலவிற்கு உலக மொழியில் அதிகம் பெயர் வைத்தது தமிழர்கள் தான், நீலம் என்பது வண்ணம், நவரத்தினங்களில் ஒன்று, என்று தான் உங்களுக்கு தெரியும் நிலவிற்கு நீலம் என்று பெயர் உண்டு தெரியுமா????

கருத்துகள் இல்லை: