Pages

செவ்வாய், ஜனவரி 01, 2013

பழமொழிகள்

சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...

பழமொழிகள்

  • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
  • கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
  • கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
  • கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
  • கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கல்வி அழகே அழகு.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
  • களவும் கற்று மர
    • இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி
  • களவும் கத்தும் மற
    • களவையும் சூதாட்டத்தையும் மற
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

 கா

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • காணி ஆசை கோடி கேடு.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
  • காரண குருவே காரிய குரு!
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  • காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • காலைக் கல்; மாலைப் புல்
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  • காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

·          

·         கி, கீ

    • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
    • கிட்டாதாயின் வெட்டென மற
    • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
    • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
    • கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
    • கீர்த்தியால் பசி தீருமா?
    • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

 கு, கூ

    • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
    • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
    • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
    • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
    • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
    • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
    • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
    • குணத்தை மாற்றக் குருவில்லை.
    • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
    • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
    • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
    • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
    • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
    • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
    • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
    • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
    • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
    • குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
    • குரங்கின் கைப் பூமாலை.
    • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
    • குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
    • குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
    • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
    • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
    • குருவிக்கேத்த ராமேஸ்வரம்
      • இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
    • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
    • குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
    • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
    • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
    • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
    • குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
    • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
    • குறி வைக்க ஏற்ற ராம சரம்
    • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
    • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
    • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
    • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
    • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
    • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
    • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
    • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
    • கூழும் சிந்தல, கோப்பையும் உடையல

கெ

    • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
    • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
    • கெடுவான் கேடு நினைப்பான்
    • கெட்டாலும் செட்டி செட்டியே,
கிழிந்தாலும் பட்டு பட்டே.
    • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
    • கெட்டும் பட்டணம் சேர்
    • கெண்டையைப் போட்டு வராலை இழு.
    • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
    • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

 கே

    • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
    • கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
    • கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
    • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
    • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
    • கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

கை

    • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
    • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
    • கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
    • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
      • இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
    • கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
      • கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
    • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
    • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
    • கையிலே காசு வாயிலே தோசை
    • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
    • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
    • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

கொ

    • கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
    • கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
    • கொடிக்கு காய் கனமா?
    • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
    • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
    • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
    • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
    • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
    • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
    • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
    • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
    • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
    • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
    • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

 கோ

    • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
    • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
    • கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
    • கோடி வித்தையும் கூழுக்குத்தான்
    • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
    • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
    • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
    • கோபம் சண்டாளம்.
    • கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
    • கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
    • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
    • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
    • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
    • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
    • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
    • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
    • கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது



Engr.Sulthan

கருத்துகள் இல்லை: